17 வயது பெண்ணின் உயிரைப் பறித்த டிவிட்டர்

AmazingPhotos

ரொமேனியா தேசத்தைச் சேர்ந்த 17 வயது பெண் Flavia Boricea. இவளுக்கு இரவு பகல் எந்த நேரமும் twitter @ டிவிட்டரில் ஆன்லைனில் இருப்பதே வேலை. டிவிட்டருக்கு அடிமையானவள் இவள். தனது குளியலறையின் பாத்டப்பில் குளித்துக்கொண்டே மடிக்கணினி @ laptop வாயிலாக தொடர்ந்து டிவிட்டரைப் பயன்படுத்தி வந்தாள். கைகளில் ஈரம் பரவி இருந்தது. லாப்டாப்பின் மின் இணைப்பும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது.

ஈரக்கையால் செல்போனைப் பயன்படுத்துவதே தவறு. பலர் இரவு முழுவதும் சார்ஜரை (charger) உபயோகித்து செல்பேசியில் சார்ஜ் ஏற்றுவார்கள். இதுவும் தவறுதான் இப்படி தொடர்ந்து தேவையில்லாமல் இரவு முழுவதும் செல்பேசியை சார்ஜில் போட்டால் அது வெடிக்கவும் செய்யும். பார்க்க படங்கள்.


செல்பேசியே @ mobile phone வெடிக்கும் என்றால் - மின் இணைப்புடன் ஈரக்கையால் கையாளப்பட்ட லாப்டாப் சும்மா இருக்குமா? தொடர்ச்சியான டிவிட்டர் பயன்பாடு - அதுவும் குளியலறைக்குள். மின்கசிவை (electric leakage) ஏற்படுத்தி இவளது உயிரைப் பறித்துவிட்டது.



இந்தப் பெண்ணின் இறப்பு குறித்த அறிக்கையில் லாப்டாப்பின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவாலோ அல்லது லாப்டாப் ஆனது பாத்டப்பில் மின் இணைப்புடன் விழுந்துவிட்ட காரணத்தாலோ - மின் பாதிப்பு ஏற்பட்டு அதனாலே இவள் இறந்துவிட்டாள் என்று கூறப்பட்டுள்ளது. ரொமேனியா மாகாண தொலைக்காட்சியிலும் இவளது இறப்பு குறித்த செய்தி ஒளிபரப்பப்பட்டது. குளியலறைத் தொட்டியில் அவள் இறந்து கிடந்ததாகவும், அருகில் லாப்டாப்பும் கிடந்ததாகவும் பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

நீதி :
டிவிட்டரைப் பயன்படுத்துங்கள் - தவறில்லை. ஆனால் குளித்து முடித்து ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தவும். இதைச் செய்யுங்கள் / அல்லது அதைச் செய்யுங்கள். குளியலையும், டிவிட்டரையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம்.

தொடர்புடைய மற்றும் ஒரு பதிவு from Cybersimman's Blog : உயிர் காத்த டிவிட்டர்.

Source : inquisitr.com
AmazingPhotos

8 comments:

jackiesekar said...

தமிழ் சில விஷயங்களில் எவ்வளவுதான் க்த்தினாலும் யாம் கேட்கப்போவதில்லை

அன்புடன் அருணா said...

மக்கள் புரிந்து கொண்டால் சரி....

வால்பையன் said...

அடங்கொன்னியா!

சாட் பண்ணா உயிர் போகுமா!

தமிழ்நெஞ்சம் said...

Aha : jackiesekar,அன்புடன் அருணா,வால்பையன்

ஆ.ஞானசேகரன் said...

//டிவிட்டரைப் பயன்படுத்துங்கள் - தவறில்லை. ஆனால் குளித்து முடித்து ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தவும். இதைச் செய்யுங்கள் / அல்லது அதைச் செய்யுங்கள். குளியலையும், டிவிட்டரையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டாம்.//

நல்ல மொழி

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு
இதப் பார்த்தாவது திருந்துவாங்களானு பார்ப்போம்........

தமிழ்நெஞ்சம் said...

Welcome : ஆ.ஞானசேகரன், முனைவர்.இரா.குணசீலன்

SUBBU said...

அடங்கொன்னியா!

சாட் பண்ணா உயிர் போகுமா!

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP