Cool Hotmail - Innovation from Microsoft  

Cool Hotmail - Innovation from Microsoft

தலைப்பிலேயே விவகாரம் வச்சுட்டோம்ல. உள்ளே என்னமோ விசயம் இருக்கப்போவுது. கண்டிப்பா இதைப்படிச்சா ஏமாற்றம் இருக்காது.அது என்ன (ரொம்பக் கூலாகன்னு அடைப்புக்குறிக்குள் போட்டிருக்கு) ... Cool Hotmail

இந்தியர் சபீர்பாட்டியாவின் hotmail சேவையை microsoft நிறுவனம் பலகோடிகளைக் கொடுத்து கையகப்படுத்தியது தெரிந்ததே.

உங்கள்பெயர்@ஹாட்மெயில்.காம் (yourname@hotmail.com) என்றுதான் இதுவரையில் இருந்தது.

இணைய உலகில் புத்தாக்கம் என்று கூறுவார்கள் (Innovation). குளிர்ந்த மின்னஞ்சலை சூடாகக் கொடுப்பதும் ஒரு புதிய புத்தாக்கம்தான். இதைச் சிலர் பழைய கள்ளை புதிய மொந்தையில் கொடுப்பது என்றெல்லாம் கூடச் சொல்லுகின்றனர்.

உங்களுக்கு yourname@hotmail.cpm என்கிற சங்கதி பிடிக்காமல் இருந்தால் நீங்கள் hotmail பக்கம் செல்லமாட்டீர்கள் தானே? உங்களை வசியப்படுத்துவதற்காகவே microsoft இந்த வசதியைத் தருகிறது.

உதாரணமாக எனக்கு தமிழ்நெஞ்சம்@பெங்களூர்ராக்ஸ்.இன் (tamilnenjam@bangalorerocks.in) என்கிற முகவரி பிடித்தமாக இருக்கிறது. நான் நேராக http://www.coolhotmail.com/ தளத்தில் மின்னஞ்சல் கணக்கைத் துவங்கி அதில் எனது பெயரையும் bangalorerocks.in ஐயும் தேர்ந்து எடுத்தேன்.

ஒவ்வொரு முறையும் எனது மின்னஞ்சல்களைப் பார்வையிடுவதற்கு hotmail.com வழியாக நுழைந்து இந்தப் புதிய innovated e-mail @ மின்னஞ்சல் முகவரியான tamilnenjam@bangalorerocks.in க் கொடுத்துத்தான் பார்வையிடுகிறேன். இது எப்படி இருக்கு?

http://www.coolhotmail.com/

ஐ-பாட் / செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்தவர்களுக்காக  

செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்த அனுபவம் நிறையப் பேருக்கு உண்டு. தானாகவே யாரும் நனைக்கமாட்டோம். எனினும் எதிர்பாராதவிதமாக இது நடந்துவிட்டிருக்கும். அப்போது என்ன செய்யலாம்.

ஒரு முதலுதவி : செல்போனுக்குத்தான்.

1) முதலில் செல்பேசியின் மின்னினைப்பைத் துண்டிக்கவும்.
2) செல்போனை நன்றாக ஒரு உறையிலிடவும்.
3) ஒரு கிண்ணம் முழுவதும் 'அரிசி' யை எடுத்துக்கொள்ளவும். அரிசியானது ஈரப்பதத்தை முழுவதும் உறிஞ்சக்கூடிய ஒரு பொருளாகும். (சமைக்கப்படாத அரிசி மட்டுமே இந்தச் செய்முறைக்கு உதவும்)
4) உறையிலிட்ட செல்பேசி / ஐ-பாட் ஐ இந்தக் கிண்ணத்தில் உள்ள அரிசிக்குள் 24 மணிநேரம் வைத்திருக்கவும்.
5) செல்பேசி / ஐ-பாடின் - மின்கலங்களை (பேட்டரி)த் தனியாக் வேறொரு அரிசிக்கிண்ணத்தில் வைப்பது உத்தமம்.
6) ஒட்டுமொத்த ஈரப்பதமும் துப்புறவாக உலர்வதற்கு 24 மணிநேரமாவது தேவைப்படும்.
7) அடுத்த நாள் உங்களது தண்ணீரால் நனைக்கப்பட்ட கருவி அற்புதமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
8) இது குறித்த தகவல் அறிய இங்கே சொடுக்கவும்.

தமிழில் சமையல் செய்முறை விளக்கங்கள் - சலனப்படங்கள்  

சிக்கன் செட்டிநாடு
பூரி - உருளைக்கிழங்கு
கோபி மஞ்சூரியன்
கோபி - 65
பருப்பு - மசால் வடை
பாவ் பாஜ்ஜி
காரமான கத்தரிக்காய்
தயிர்சாதம்
வெங்காயச்சட்டினி
பருப்புக்கீரை
வத்தல் குழம்பு
ரசம்
மற்றும் பல சமையல் குறிப்புகளின் வீடியோப் பதிவுகள் இங்கே உள்ளன.
வாழ்க வளமுடன். நன்றாகச் சமைப்பதற்கு இந்த வீடியோப்பதிவுகள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://www.youtube.com/profile_videos?p=r&user=englishtamil&page=1

http://www.youtube.com/profile_videos?p=r&user=englishtamil&page=2

கூகிள் அனாலிடிக்ஸ் - ஒரு அறிமுகம்  

கூகிள் அனாலிடிக்ஸ் - ஒரு அறிமுகம்

வலைப்பூ வைத்திருப்போருக்கு இது கண்டிப்பாக உதவும். உங்கள் வலைப்பூவின் போக்குவரத்துப் புள்ளிவிவரங்களை அலசி ஆராய்வதற்கு இந்தத் தளம் உதவுகிறது.

எந்தத் திரட்டியிலிருந்து எத்தனை வாசகர்கள் உங்கள் வலைக்கு வந்தார்கள்.
எவ்வளவு நேரம் வாசித்தார்கள்.
எந்தத் தேடுதல் வார்த்தை வாயிலாக உங்கள் தளத்திற்கு 'தேடுபொறி' வாசகர்களை அனுப்பியது.
என்பன போன்ற பல்வேறுவிதமான புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைக்கிறது.

முதலில் கூகிள் அனாலிடிக்ஸ் இல் உங்களது கூகிள் அக்கவுன்ட் வழியாக லாகின் செய்யவும்.
உங்கள் வலைப்பூவிற்கான புரொபைலை உருவாக்கி, கூகிள் தரக்கூடிய டிராக்கிங் நிரலைப் New Tracking Code (ga.js) பெற்று அந்த நிரலை உங்களது வலைப்பூவின் ஜாவாஸ்கிரிப்ட் கோடாக இணைத்துவிடவும். 24 மணிநேரத்துக்குள்ளாக உங்கள் வலைப்பூவின் இன்கமிங் / அவுட்கோயிங் புள்ளிவிவரங்களை கூகிள் அனாலிடிக்ஸ் பெற்று அதை அப்டேட் செய்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் இது ஏற்புடையதாக இருக்கும்.

ஒரு முறை முயன்று பாருங்கள். உங்கள் வலைப்பூவின் புள்ளிவிவரங்களை நீங்கள் அறிய எனது வாழ்த்துக்கள்.


https://www.google.com/analytics/home/?et=reset&hl=

PDF file-ஐ பதிவில் எப்படி இணைப்பது? படங்களுடன் கூடிய விளக்கம்  

உதவிக்கு வாங்க கணினி வல்லுநர்களே! ஒரு PDF file-ஐ பதிவில் எப்படி இணைப்பது? என்று ரெத்னேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கான பதில் விளக்கப் பதிவு இது.கூடுமானவரையில் எனது பதிலை - விளக்கப்படங்களுடன் கொடுத்துள்ளேன். ஒரு முறை முயன்று பார்க்கலாமே?
1) முதலில் ஸ்க்ரிப்டு [Scribd] தளத்தில் ஒரு பயனர் கணக்கை [User Creation] ஏற்படுத்திக்கொள்ளவும்.

2) அந்தக் கணக்கின் மூலம் ஸ்க்ரிப்டுக்குள் நுழையவும்[Login].

3) [Upload] கிளிக் செய்து [Click Upload]ஐயும் தெரிவுசெய்து கோப்பு(களை)த் தெரிவு செய்யவும்.
4) உங்களது கோப்பு(கள்) ஸ்கிரிப்டு தளத்தில் ஏற்றப்பட்டவுடன் [Publish] பட்டனை அழுத்தவும்.5) பிறகு பகிர்தல் குறித்து கேட்கப்படும் [advanced] பட்டனைத் தேர்வு செய்து [book] ஐ அழுத்தவும்.



6) அதில் [update] ஐ தேர்ந்தெடுத்து, எழுத்து வடிவில் இருக்கும் நிரலைக் காப்பி செய்யவும்.
7) அந்தக் காப்பி செய்யப்பட்ட நிரலை - உங்களது வலைப்பூவின் புதிய பதிவில் [Edit Html] தேர்ந்தெடுத்தபிறகு [Paste] செய்யவும்.
8) பிறகு உங்களது தலைப்பையும், உட்பிரிவுகளையும் கொடுத்தபிறகு [Publish Post] செய்யவும். அவ்வளவுதான்.
9) இப்போது [Scribd] இல் ஏற்றப்பட்ட பிடிஎப் கோப்பானது உங்களது வலைப்பூவில் காட்சியளிக்கும்.
10) வலைப்பூவில் உள்ள பிடிஎப்பை மிகமிகப் பெரிய பக்கமாகக் காண ஸ்க்ரிப்ட் கருவிப்பட்டியில் வலது ஓரத்தில் உள்ள பெரிதாகக் காட்டு ஐக்கானில் கிளிக் செய்தால் போதும்.

சிவப்புச் சதுரமிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 10 ஸ்டெப்ஸ் தான். நன்றி ரெத்னேஷ் அவர்களே.

எழுத்தாளர் ஞாநியின் கட்டுரைகள்  

எழுத்தாளர் ஞாநியின் கட்டுரைகளை அவரது கைவண்ணத்தில் மலர்ந்த மலர்களைப் படிப்பது என்பது இப்போது எல்லோருக்குமே விருப்பமாகியிருக்கிறது.

அந்த ஆவலைப் பூர்த்திசெய்யும் வகையில் அவரது எழுத்துக்களை இங்கே வடித்திருக்கிறார். காணலாமே?


http://www.keetru.com/dheemtharikida/index.php

பிரிவோம் சந்திப்போம் - பாட்காஸ்ட் ஒலிவிமர்சனம்  

கனடாவில் வசிக்கும் 'சுரேசுகுமார்' உச்சரிப்பில் உள்ளதை எம்பி3 ஆக இணையிறக்கியும் கேட்கலாம்.

இணையத்தில் கண்டேன். இங்கே பகிர்கிறேன்.

http://englishtamil.blogspot.com/2008/03/ostracized-solitude-in-tamil-movies.html

கணினித் திரையின் நடப்பை அப்படியே படமாக்க  


திரையின் நடப்பைத் தெளிவான எப் எல் வி படமாகப் பதிந்துகொள்ளலாம்.
அதிகபட்சமாக 20 நிமிடங்களில் நடக்கும் ஆக்சன்களை சேமிக்கலாம்.
கணினி விளையாட்டுக்களையும் இம்மி பிசகாமல் கேப்சர் செய்யமுடியும்.

ஒலிப்பதிவில் பிழையிருந்தால் அதையும் சரிசெய்ய வாய்ப்பு.
பதிந்துகொண்டு இருக்கும்போதே பெரிதாகவோ / சிரிதாகவோ பதியும் காட்சியை மாற்றவும் இயலும்.

இந்த மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. விஸ்டாவுக்கும் ஏற்புடையதாகவுள்ளது.

இணைய இணைப்பின்றி உலாவுவோமா?  


WebZip தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும்.நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி.

உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில் சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தளத்தை பிரவுஸ் செய்யலாம்.

WebZip இது ஒரு இலவச ஆஃப் லைன் பிரவுசர். இதனைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த இணையதளத்தின் பக்கங்களை காப்பி செய்து ஹார்டு டிஸ்கில் ஏற்றிக் கொள்ளலாம்.


WebZip இணையதள முகவரி ஒன்றை அளியுங்கள் அது அந்த இணையதளம் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ உங்கள் ஹார்டு டிஸ்கில் பதிவிறக்கம் செய்து விடும். அப்படியே அந்த இணையதளத்தில் ஆன்லைனில் என்ன கண்டீர்களோ அது அப்படியே டெக்ஸ்ட், இமேஜஸ், எச்.டி.எம்.எல் அனைத்தையும் அப்படியே அச்சு அசலாகக் காட்டும்.

குளியலறைக்குள்ளும் நுழைகிறது கூகிளின் 'ஜிமெயில்'  


இங்கே படத்தில் காட்டப்படுபவை போட்டோசாப் மூலம் பெறப்பட்ட மேஜிக் அல்ல.

நிஜம்தான். ரஸ்யாவில் ஒரு நிறுவனம் 'ஜிமெயில்' சோப்பை 'சுத்தமான சோப்' என்று கூவிக் கூவி விற்பனை செய்கிறது.

உங்களது .DOC கோப்புக்களை .PDF ஆக மாற்றுவதற்கு ஒரு ஆன்லைன் வசதி.  

உங்களது .DOC கோப்பை http://www.zamzar.com/ தளத்திற்கு இணையேற்றுங்கள். அத்துடன் எந்த வகையான வெளியீடு என்பதில் PDF என்று கொடுங்கள். உங்களது மின்னஞ்சல் முகவரியையும் உடன் தரவும்.

PDF வகைக்கு மாற்றப்பட்ட கோப்பானது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு http://www.zamzar.com/ தளத்தால் அனுப்பிவைக்கப்படும்.

கோப்பின் கொள்ளளவு 100 எம்பி வரை இருக்கலாம்.

அடோப் ரீடருக்கு ஒரு மாற்று  


பாக்சிட் ரீடர் என்பது இதன் பெயர்.
  • இது ஒரு இலவச பிடிஎப் வியூவர் மற்றும் பிரிண்டர் மென்பொருள்.
  • இதன் கொள்ளளவு வெறும் 2.1 எம்பி மட்டுமே.
  • மிகவேகமாக பயன்பாட்டைத் துவக்குகிறது.
  • பிடிஎப் உள்ளடக்கத்தை டெக்ஸ்ட் ஆக மாற்றிக்கொள்ளலாம்.
  • இதில் எந்த ஸ்பைவேரும் கிடையாது.
இங்கே வலது கிளிக்கி இணையிறக்கம் செய்யலாம்
http://www.foxitsoftware.com/
http://www.foxitsoftware.com/pdf/reader_2/down_reader.htm

டாப் லெவல் டொமைன் படம்  



அந்தந்த நாடுகளின் மக்கள் தொகைக்கு நேர்விகிதத்தில் நாடுகளின் டாப் லெவல் டொமைன் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

தினமணி சிறுகதைத்தொகுப்புக்கள்  


தினமணி கதிரில் வெளியான சிறுகதைகளில் சிலவற்றைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இத்தொகுப்பு.

இதில் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்கள் முதல் வளரும் எழுத்தாளர்கள் வரை பலரின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இங்கே சென்று படிக்கலாமே?





விகடனில் வெளிவந்த ஒரு நிமிடக்கதைகள்  


நன்றி : ரவிப்பிரகாசு

வழமை போல சுட்டி இங்கே கதைகள் அங்கே

http://nraviprakash.blogspot.com/2008/03/blog-post_04.html

அரட்டை அரங்கங்களின் சங்கமம்  


யாகூ, எம் எஸ் என், ஜிடாக், ஏஓஎல் - என பலதரப்பட்ட உடனடி அரட்டை அரங்கங்களையும் ஒருங்கே ஒரே இடத்தில் பெற மீபோவை நாடியிருப்பீர்கள்.
அதுபோல இதுவும். ஏதேனும் வித்தியாசமாக உணரமுடிகிறதா?

வீடியோ அரட்டைகள் அடிப்பதற்கு இந்த மென்பொருளை இறக்கிக்கொள்ளவும்.

https://imo.im/
https://imo.im/downloads/imo%20Setup.exe

இணையப் பக்கங்களையும், அலுவலகக் கோப்புகளையும் எம்பி3 ஆக மாற்ற  

இணையப் பக்கங்களையும், அலுவலகக் கோப்புகளையும் எம்பி3 ஆக மாற்ற
[ http://readthewords.com/Default.aspx ] தளத்தை உபயோகப்படுத்தலாம்.

பவர்பாய்ன்ட் ஸ்லைட்ஸ், வேர்ட் கோப்புகள், பிடிஎப், எச்டிஎம் எல் , ஆரெஸ்ஸெஸ் ஊட்டிகள் எல்லாவற்றையும் இந்தப் பயன்பாட்டின் மூலம் எம்பி3 ஆக மாற்றிக்கொள்ளலாம்.

இதன்மூலம் அமெரிக்க ஆண் பேசக்கூடிய உச்சரிப்பிலேயோ, பிரிட்டிஷ் பெண் பேசக்கூடிய உச்சரிப்பிலேயோ, அல்லது இந்தியரின் உச்சரிப்பிலேயோ கூட எம்பி3 களை உருவாக்கலாம்.

மிகப்பெரிய கொள்ளளவுள்ள கோப்புகளை எம்பி3 ஆக மாற்ற தனியாக நேரம் தேவைப்படுவதில்லை. மாறாக எம்பி3 ஆக மாற்றப்பட்ட கோப்புகளை நீங்கள் உங்களது மின்னஞ்சல் வாயிலாகவே பெற்றுக்கொள்ளலாம்.

குறைபாடுகள் உள்ளவர்களுக்காகவே பிரத்தியேகமாக இந்தப் பயன்பாடு இருந்தபோதிலும் அனைவரும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

எப் எல் வி யிலிருந்து எம்பி3 வடிவத்துக்கு மாற்ற இலவச மென்பொருள்  

எப் எல் வி யிலிருந்து எம்பி3 வடிவத்துக்கு மாற்ற இலவச மென்பொருள்


சுட்டி இங்கே கோப்பு அங்கே

கர்நாடக இசை எம்பி3 பாடல்கள் - நாட்டியம் விரும்புவோர்களுக்காக  

கர்நாடக இசை எம்பி3 பாடல்கள் - நாட்டியம் விரும்புவோர்களுக்காக

இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.

http://www.techsatish.com/2006/12/carnatic-music-mp3.html

மைக்ரோசாப்ட் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 (பீட்டா)  


இந்த மென்பொருள் விஸ்டாவுக்கும், எக்ஸ்ப்பி சர்வீஸ்பேக் 2 க்கும் ஏற்புடையது.

1. ஐஇ 4எக்ஸ்ப்பி சர்வீஸ்பேக் 2
2. ஐஇ 4 விஸ்டா

கணினி மலர்  


Dinamalar - Computer Malar: Computing Special Edition in Tamil - Tips, Tricks, Word, Hard Drive, Disk Access, Password, Microsoft, Protect, Security

தமிழ்2000: கணினி மலர்: Information Technology



அருமையான மென்னூல் வடிவில் கணினி மலர் இதோ இங்கே...


http://www.dinamalar.com/computermalar/COMPUTERMALAR.asp

மின்னஞ்சல் அட்டாச்மென்ட்டும் வைரசும்.  

உங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சலின் அட்டாச்மென்டில் வைரசு இருக்கிறதா - என்று எவ்வாறு பரிசோதிப்பீர்கள்?

அதை முதலில் இணையிறக்குவீர்கள். பின் அதை உங்களது கணினியில் உள்ள வைரசு எதிர்ப்பான் மூலம் சோதிப்பீர்கள். சில நேரங்களில் வைரசுஎதிர்ப்பான் நன்றாகவே வேலை செய்யும். அதாவது வைரசுஎதிர்ப்புத் தொகுப்புகளை நீங்கள் தினமும் இணையத்திலிருந்து அப்டேட் செய்துகொண்டே வந்தீர்கள் என்றால் மட்டும்.

இவ்வாறு மின்னஞ்சல் அட்டாச்மென்ட்டை டவுன்லோடு செய்தபிறகு அதில் வைரசுதொற்று இருக்கிறதா என சோதிப்பதைக் காட்டிலும் பின்வருமாறு செய்வது ஆபத்தில்லாத ஒரு நடைமுறை.

மாற்று :

அந்த மின்னஞ்சலை இந்த [ scan@virustotal.com ] முகவரிக்கு பார்வர்டு செய்யவும். அட்டாச்மென்ட்டின் அதிகபட்சக் கொள்ளளவு 10எம்பி.
தலைப்பில் [ SCAN ] என்று தட்டெழுதவும். உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் அடக்கத்தை அழித்துவிடவும். அட்டாச்மென்ட் நீங்கலாக. (அதாவது பாடி ஆப் த மெசேஜ் ஐ மட்டும் அழித்துவிடவும்.)

சில நிமிடங்களில் 'அந்த அட்டாச்மென்டின் வைரசு தொற்று பற்றிய தகவல்' உங்களுக்கு வேறு ஒரு மின்னஞ்சலாக வந்துவிடும்.

http://www.virustotal.com/

மின்னஞ்சல் கதை - 4  

ஒரு சிறிய பெண்குழந்தையும் அவளது தந்தையும் ஒரு
ஆற்றுப்பாலத்தை கடந்து கொண்டிருந்தார்கள்.

பாலத்தின் நிலையை அறிந்து சற்றே பயந்த தந்தை, "ஆத்துல தவறி விழுந்துடாம இருக்குறதுக்கு என் கைய கெட்டியா பிடிச்சுக்கோம்மா.." என்றார்.

அவள் சொன்னாள் - "இல்லப்பா... நீங்க என் கைய பிடிச்சுக்கோங்க" என்றாள்.

கொஞ்சம் குழம்பிய தந்தை "ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?" என்றார்.

"வித்தியாசம் இருக்குப்பா... பெரிய வித்தியாசம்!" என்றாள் அவள்.

" நான் உங்க கைய பிடிச்சுகிட்டு இருந்தா... ஏதாவது நடக்கும் போது ஒரு வேளை நான் உங்க கைய விட்டுறதுக்கு சான்ஸ் இருக்கு. ஆனா நீங்க என் கைய பிடிச்சுகிட்டு இருந்தா.. என்னதான் நடந்தாலும் என் கைய நீங்க விடமாட்டீங்கன்னு எனக்கு நிச்சயமா தெரியும்பா..!" என்றாள்.

எந்த ஒரு உறவிலும் நம்பிக்கை வெறும் குருட்டுத்தனமானதல்ல; மனங்களின் சந்திப்பில் இருக்கும் பிரிக்க முடியாத பிணைப்புதான் நம்பிக்கை.

ஆகவே நீங்கள் அன்பு செலுத்தும் உறவின் கையை இறுக பற்றிக்கொள்ளுங்கள்; அவர்கள் பற்றிக்கொள்ளட்டும் என்று காத்திருக்க வேண்டாம்.

மின்னஞ்சல் கதை - 3  

நாவினாற் சுட்ட வடு.

ஒரு காலத்தில் மிகவும் கோபப்படக்கூடிய பையன் ஒருவன் இருந்தான். எதற்கெடுத்தாலும், யார் பேசினாலும் காரணமின்றி கோபப்படுவான்.

அவனுடைய தகப்பனார் அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளையும் சுத்தியலையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபப்படும் போதும் ஒரு ஆணியை வீட்டின் காம்பவுண்டு சுவரில் அடிக்கும் படி கூறினார்.

அடுத்த நாளில் அவன் 37 ஆணிகளை சுவரில் அடிக்க வேண்டியதாயிற்று. அத்ற்கடுத்த சில வாரங்களில் அவன் தன்னுடைய கோபத்தை எப்படிக்கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். சுவரில் அவன் அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது.

காலப்போக்கில் சுவரில் ஆணி அடிப்பதை விட கோபத்தை கட்டுப்படுத்துவது எளிதானது என்பதை அவன் கண்டுபிடித்தான். கடைசியாக ஒரு நாள் அவனால் கோபப்படாமலேயே இருக்க முடிந்தது.

அதை அவன் தகப்பனாரிடம் தெரிவித்தான். அவர் அவன் கோபப்படாமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியை சுவரில் இருந்து பிடுங்குமாறு கூறினார்.

கோபப்படாத ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆணியாக அவன் பிடுங்க ஆரம்பித்தான். நாட்களும் நகர்ந்தன. ஒரு நாள் சுவரில் இருந்த எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட்டு விட்டன.

அதை அறிந்த தகப்பனார் அவனை அந்த சுவரினருகே அழைத்துச் சென்றார்.

"நல்ல காரியம் செய்தாய் மகனே. முன்பு இந்த சுவர் எவ்வளவு அழகாக சுத்தமாக இருந்தது?! இப்போதும் அதே சுவர்தான். ஆனால் பழைய நிலையிலா இருக்கிறது? இல்லை அல்லவா. கோபத்தில் நீ சொல்லும் வார்த்தைகள் கூட இப்படித்தான் - சுவரில் இருக்கும் ஓட்டைகள் போல - வடுவை உண்டாக்கி விடும். ஒருவனை கத்தியால் குத்திவிட்டு பின்பு நாம் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் கூட, அந்தக் காயத்தால் ஏற்பட்ட வடு அவன் உடலில் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். வார்த்தைகள் மனதில் ஏற்படுத்தும் வடுவும், காயத்தில் ஏற்படும் வடுவைப்போன்றதே என்பதை உணர்ந்து கொள்.

அன்பும், நட்பும் நிறைந்திருப்பவர்களை பெறுவதென்பது ரத்தினங்களைப் பெறுவது போன்றது. அவர்கள் உன்னை மகிழ்விப்பார்கள், உற்சாகப்படுத்துவார்கள். எப்போதும் நீ கூறுவதை காது கொடுத்து கேட்பார்கள். சுக, துக்கங்களில் பங்கு கொண்டு ஆறுதலான வார்த்தைகளை அள்ளித்தருவார்கள். எல்லாவற்றையும் விட அவர்கள் எப்போதுமே திறந்த மனதுடன் உனக்காகவே காத்திருப்பார்கள். புரிகிறதா?

நான் எப்போதாவது இது போன்ற ஓட்டையை உண்டாக்கி இருந்தால் என்னை மன்னித்து விடு மகனே."

மின்னஞ்சல் கதை - 2  

வேலைப்பளு மிகுந்த காலை நேரம் 08:30.

எண்பது வயதான ஒரு முதியவர் அவர் கட்டை விரலில் போடப்பட்டிருந்த தையலைப் பிரிப்பதற்காக வந்திருந்தார். ஒன்பது மணிக்கு ஒரு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறி அவசரப்பட்டார்.

வேறு மருத்துவர் கவனிக்க குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு மேலாகும் என்பதால், அவரை ஒரு இருக்கையில் அமரச்செய்தேன். அவர் அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

எனக்கும் அப்போதைக்கு வேறு நோயாளிகள் இல்லாததால், அவரை கவனிப்பது என முடிவு செய்தேன். அவரது காயத்தை ஆராய்ந்ததில் அது நன்கு குணமடைந்தது தெரிய வந்தது. ஆகவே தாதியை அழைத்து அவரது தையலைப் பிரிக்கவும், காயத்திற்கு மருந்து போடவும் கூறினேன்.

அவரது காயத்தை ஆராயும் போது, "வேறு மருத்துவரிடம் செல்ல அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி இருக்கிறீர்களா என்ன..? இவ்வளவு அவசரத்தில் இருக்கிறீர்களே?" எனக் கேட்டேன்.

அதற்கு அவர் மறுதலித்து ஒரு மருத்துவமனைக்கு அவரது மனைவியுடன் காலை உணவருந்த செல்ல வேண்டியிருப்பதாக கூறினார்.

அவரது மனைவியின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அவரது மனைவி அங்கு சில காலமாக தங்கியிருப்பதாகவும் ஒரு வகை (Alzheimer's disease) வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அவர் தாமதமாக போனால் அவரது மனைவி விசனப்படுவார்களா என வினவினேன்.

அதற்கு அவர் தான் யாரென்றே அவரது மனைவியால் கண்டு கொள்ள முடியாதென்றும், கடந்த ஐந்து வருட காலமாக அப்படித்தான் இருப்பதாகவும் கூறினார்.

ஆச்சரியத்தில் "நீங்கள் யாரென்றே உங்கள் மனைவிக்குத் தெரியாது. இருந்தாலும் தினம் காலை அவரைக் காண செல்கிறீர்களா..!?" எனக் கேட்டேன்.

எனது கையை மெல்லத்தட்டிய படியே "அவளுக்கு என்னைத் தெரியாது. ஆனால் இன்னும் எனக்கு அவளை யாரென்று தெரியுமே!" என்று கூறியபடியே புன்னகைத்தார்.

அவர் கிளம்பும் போது "இப்படியான ஒரு அன்புதான் எனக்கும் கிடைக்க வேண்டும்" என்று எண்ணியபடியே திரண்டு வந்த கண்ணீரை அடக்கிகொண்டேன்.

உண்மையான அன்பு என்பது இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில்தான். இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோ மாற்றி அடைவதோ அல்ல... என்பதும் புரிந்தது.

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எல்லாம் மிகச்சிறந்தவற்றை அடைந்து விட்டதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதல்ல. அவர்கள் தங்களுக்கு கிடைப்பவற்றை மிகச்சிறந்ததாக மாற்றிக்கொள்கிறார்கள்!

புயலை எதிர்கொள்வது என்பதில் மட்டுமில்லை... மெல்லிய மழைச்சாரலில் நடனமாடுவதையும் சேர்த்துதான் இந்த உலக வாழ்க்கை!

மின்னஞ்சல் கதை - 1  

பார்வைகள் பலவிதம்.

ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அடித்துப்பிடித்து வண்டிக்குள் அந்தக்குடும்பத்தினர் ஏறினார்கள். இருக்கையைத்தேடி அமரும் போது அருகே ஒரு முதியவரும், கண்ணாடி அணிந்த ஒரு இளைஞனும் அமர்ந்திருந்தார்கள்.

அந்த இளைஞன் வருபவர்கள் போவோர்கள் எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

வண்டி கிளம்பியது. சில நிமிடங்களுக்குப் பின் அந்த இளைஞன் சந்தோசத்தில் கத்த ஆரம்பித்தான் - "அப்பா இங்க பாருங்க... எல்லாமே எவ்ளோ நல்லா இருக்கு..!". அவனது அப்பாவான அந்த முதியவரும் ஆமோதிப்பவராக தலையசைத்தார்.

பழங்கள் விற்பவர்கள் வந்தார்கள். அந்த இளைஞன் - "ஹைய்யா... அப்பா... அதானே சாத்துக்குடி.... அதானே ஆப்பிள்" என்றான்.
அந்த முதியவரும் "ஆமாம்..பா" என்றார்.

அடுத்தடுத்து இதே போல நடந்த நிகழ்வுகளில் அந்த இளைஞனைப் பார்த்து அந்தக்குடும்பத்தினர் எரிச்சல்பட்டுக் கொண்டே முணுமுணுக்க
ஆரம்பித்தார்கள். அந்த இளைஞன் கண்டுகொள்வதாயில்லை.

சற்று நேரத்தில் லேசான தூறல் ஆரம்பித்தது.

"ஹைய்யா... மழை...! அப்பா.. மழை பாருங்கப்பா...!!" என்று அவ்விளைஞன் குதிக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் மழை வலுத்து, மழை நீர் வண்டியின் உள்ளேயும் தெறிக்க ஆரம்பித்தது.

"சன்னலை மூடுங்க" - என்ற அந்தக் குடும்பத்தினரின் குரலை அந்த இளைஞன் பொருட்படுத்தவில்லை.

அந்த இளைஞன் மழைநீரில் கைகளை நனைத்து விளையாட ஆரம்பித்திருந்தான். மழை நீர் லேசாக அந்தக்குடும்பத்தினரின் ஆடைகளிலும் பட ஆரம்பித்திருந்தது.

அந்தக்குடும்பத்தில் ஒருவர் கோபத்துடன் "ஏன் சார்.. கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா..? பப்ளிக் பிளேஸில் எப்படி நடந்துக்குறதுன்னு
தெரியாதா..? எத்தனை வயசாச்சு...! இன்னும் இப்படியா..? மூளை சரியில்லன்னா மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டியதுதானே..? அதை விட்டுட்டு, இப்படி கூப்பிட்டு வந்து ஏன் எல்லார் உயிரையும் வாங்குறீங்க..?" என்றார்.

அந்தப் பெரியவர் சொன்னார் - "மன்னிச்சுக்கோங்க. நேத்துதான் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணுனாங்க.. பிறவியில் இருந்தே அவனுக்கு பார்வை இல்லாம இருந்துச்சு. இங்க இருக்குற ஆஸ்பத்திரியில பெரிய டாக்டருங்க இருக்காங்கன்னு சொன்னதால வந்தோம். ஆபரேசன் செஞ்சு கண்பார்வை சரியானதுனால அவனுக்கு பாக்குற எல்லாமே ஆச்சரியமா இருக்கு. இத்தன வருசமா தடவிப்பாத்து மட்டுமே தெரிஞ்சிகிட்டவன் இன்னைக்கு நேருல பாக்குறதால அப்படி நடந்துக்குறான். தெரியாம அவன் உங்களுக்கு தந்த தொந்தரவுக்கு தயவு பண்ணி மன்னிக்கணும். நாங்க
வேணும்னா வாசல் பக்கத்துல போயி நின்னுக்குறோம்."

மகாகவி பாரதியாரின் வரிகளில் எம்பி3 பாடல்கள்  

http://www.tamilmusica.com/index.php?p=Devotional%20Albums%2FHindu%2FClassical%20Hits%20Of%20Bharathiyar

http://www.westerntamil.com/tamilsongs/devo/atma/

http://66.90.103.126/~rose4you/www.rose4you.dk/index.php?dir=01.%20Tamil/Special%20Albums/Bharathiyar%20Paadalgal/

இளையராஜாவின் இசைப்பயணம் ஆர்மோனியம் முதல் ஆர்க்கெஸ்ட்ரா வரை  


இளையராஜா தமிழ் திரையுலகின் தனி சகாப்தம்.
பாமர ரசிகனும்... திரையிசைப் பாடல்களை தாளம் போட்டு ரசிக்கவைத்த இசை வித்தகர்.

தமிழகத்தின் தென்கோடி தேனி மாவட்டத்தில்... மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் கிராமமாகிய பண்ணைப்புரத்தில் ராசய்யாவாக பிறந்து, முதல் படமாம் 'அன்னக்கிளி'யின் மெல்லிய சிறகுகள் மீது ஆரோகணித்து, இசை வானில் பறக்க ஆரம்பித்தார்.

பின்னாளில் தமிழகத்திற்கே இசை ராஜாவாக மாறினார் இளையராஜா. லண்டன் 'சிம்பொனி' இசை மூலம் உலக ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

அப்படிப்பட்ட இசைப் பல்கலைக்கழகத்தை பற்றி பத்து அத்தியாயங்களில் உங்கள் முன் சில 'பாடங்களை' சமர்ப்பிக்கிறோம்...

http://www.dinamani.com/Malar/Ilayaraja/

முதல் பிரசவம் : பகுதி 2  

சிந்தனையில் உருவான கருவுக்கு வார்த்தைகளால் உயிரூட்டி எழுத்துகளாகப் பிரசவித்த தங்கள் முதல் அனுபவம் எத்தகையது என்பதை விளக்குகின்றனர் எழுத்தாளர்கள். இத் தொகுப்பில் பத்து எழுத்தாளர்களின் படைப்பு அனுபவம் இடம்பெற்றுள்ளது.

பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள், நாவல்கள் என எழுத்துலகில் தனி இடம் பிடித்தவர் இவர். சுசீலா பரத் என்ற இவரது பாத்திரங்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். தன் முதல் படைப்பு பற்றியும் தன் பெயரில் பட்டுக்கோட்டை இடம் பிடித்தது எப்படி என்றும் சொல்கிறார்.

பெண் எழுத்தாளராகப் பிரபலமான அனுராதா ரமணன், அடிப்படையில் ஓர் ஓவியக் கலைஞர். தான் எழுத்தாளராக உருவாக நேர்ந்த சம்பவத்தை விவரிக்கிறார்.

விமலாரமணி பெண் எழுத்தாளர்களில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. வெள்ளைத் தாள்களில் கருப்பு எழுத்துகளாகத் தன் படைப்பை முதன் முதலில் தரிசித்த அனுபவத்தை அந்த பதற்றமான, பரவசமான நிலையைத் தத்ரூபமாகக் கண்முண்ணே கொண்டுவருகிறார்.

அய்க்கண், பூவண்ணன், ருக்மிணி பார்த்தசாரதி என பலரும் இவரின் உணர்வையே பிரதிபலிக்கின்றனர்.

http://www.dinamani.com/malar/MudhalPrisavam/collection_2/index.asp

முதல் பிரசவம் : பகுதி 1  

இன்று மக்களிடையே மிகப் பிரபலமாக விளங்கும் சில எழுத்தாளர்கள் தங்கள் முதல் படைப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள் இத் தொகுப்பில்.

கதைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள் என பல்வேறு தளங்களிலும் தன் எழுத்துகளால் முத்திரை பதித்தவர் வல்லிக்கண்ணன். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இவர்.

ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குநராக மக்கள் மனத்தில் பதிந்தவர் தங்கர்பச்சான். தான் எழுதத் தொடங்கிய அந்த அனுபவத்தை கிராமிய மணத்தோடு சித்திரித்திருக்கிறார்.

திலகவதி காவல் துறையில் உயர் பதவி வகித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், எழுத்துத் துறையிலும் தனக்கென ஓர் இடம் பெற்றுக்கொண்டவர்.

தினமணியில் தலையங்கக் கட்டுரைகள், தினமணி கதிரில் சிறுகதைகள் பல எழுதியுள்ளவர் ஆண்டாள் பிரியதர்ஷினி.
இம் முதல் தொகுப்பில் பத்து எழுத்தாளர்களின் முதல் 'பிரசவ' அனுபவம் இடம்பெற்றுள்ளது.

http://www.dinamani.com/malar/MudhalPrisavam/collection_1/index.asp

ராஜேஷ்குமாரின் தப்புத் தப்பாய் ஒரு தப்பு  

ராஜேஷ்குமார் - பி.எஸ்.சி., பி.எட்., படித்துவிட்டு, பள்ளிக்கூட ஆசிரியராக இருந்து படைப்பிலக்கியப் பாதைக்கு வந்தவர். 22 ஆண்டுகளாக நாவல் உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இவர், க்ரைம் நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர்.

1000 நாவல்களுக்கும் மேல் எழுதிக் குவித்துள்ள இவரின் ஆயிரமாவது நாவல் "டைனமைட்-98'. தினமணி கதிருக்காக இவர் படைத்தளித்த தொடர்கதைதான் "தப்பு தப்பாய் ஒரு தப்பு'. தொடர்ந்து 26 வாரங்கள் வெளிவந்து வாசகர்களை மகிழ்வூட்டிய இத் தொடர்கதை புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது இன்டர்நெட் வாசகர்களுக்காக.

http://www.dinamani.com/Malar/RajeshKumar/